Friday, June 8, 2018
நல்ல சிந்தனைகள்
காலை வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள்.
👍👍👍👍👍👍
1) கறந்த பசும்பாலை அருந்துங்கள் பாக்கெட் பால் ஒழியும்.
2) உள்நாட்டுப் பொருட்களை பயன்படுத்துங்கள் நம் நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
3) நம் நாட்டில் தயாராகும் தரமான பொருட்களை ஊக்கப்படுத்துங்கள். அந்நிய நாட்டு கொள்ளையர்கள் காணாமல் போவார்கள்.
4) நம் வீட்டு ஏரி ,குளம், பம்ப் தண்ணீரை எடுத்து பயன்படுத்துங்கள். இளநீர்,மோர், நன்னாரி, கூழ் குடியுங்கள்.
காணாது போகும் வெளிநாட்டு பாணங்கள் மற்றும் நீர் பாட்டில்கள்
5) ஞாயிற்றுக்கிழமை என்றால் புலால் என்பதை விடுத்து முன்னோர்களை போல விசேசங்களுக்கு மட்டும் சாப்பிடுங்கள். பிராய்லர் காணாது போகும் முடிந்தவரை இடம் உள்ளவர்கள் நாட்டு கோழி வளருங்கள்.
6) கையோடு பை வைத்துக் கொள்ளுங்கள் பிளாஸ்டிக் ஒழியும்.
7)ஒரு சீமை கருவேலத்தை வேரொடு சாயுங்கள் வறட்சி குறையும்.
8)நீர் நிலைகளில் குப்பைகளையும் வீட்டு கழிவுகளையும் கலக்காதீர்கள். நல்ல சுத்தமான குடிநீர் கிடைக்கும்.
9) இயற்கை உரங்களை பயன்படுத்துங்கள். வளரும் தலைமுறைகளேனும் நோயின்றி வாழட்டும்.
10) போதைப் பொருட்கள்,மது பயன்படுத்துவதை தவிருங்கள். உடல் வலிமையும்,மன உறுதியும் உண்டாகும்.
11) அன்னிய நாகரீகம் வேண்டாம். நமது பண்பாடே உயர்வானது.
முயன்றால் முடியாதது ஏதுமில்லை...
அன்புடன் சிவக்குமார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment